சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. இதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு டிசம்பர் 10ம் தேதியும், பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் 10ம் தேதியும் தொடங்குகின்றன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் மொழித்தாள்கள் தமிழ், ஆங்கிலம் தலா ஒரு தாள்தான்.