பாஜ ஆபத்தான கட்சி என ரஜினி கூறியது உண்மைதான்: புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி

சென்னை: ரஜினி கூறியதுபோல பாஜ ஆபத்தான கட்சி மட்டுமல்ல, நாட்டை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கக்கூடிய ஒரு கட்சி என்று நாராயணசாமி கூறினார்.புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 8 மணிக்கு சென்னை வந்தார். அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாநிலத்தில், துணை நிலை ஆளுனர் கிரண்பேடிக்கும், எனக்கும் தனிப்பட்ட விதத்தில் எந்த மோதலும் கிடையாது. அவர், அதிகார எல்லைக்குள் செயல்படாமல் வரம்பு மீறி செயல்படுவதால்தான் பிரச்னை ஏற்படுகிறது. தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக கூறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்ததோடு மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகம் வந்து திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து பேசினார். சந்திரபாபு நாயுடுவின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இதில் மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது. நடிகர் ரஜினி கூறியிருப்பதுபோல், பாஜக ஆபத்தான கட்சி மட்டுமல்ல, நாட்டை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கக்கூடிய ஒரு கட்சி. மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: