திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ஆமீர்3.85 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர்.திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் இந்த நாடுகளில் இருந்தும் விமானங்கள் வருகின்றன. சமீப காலமாக திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டுக் கரன்சிகள் பிடிபடுவது அதிகரித்துள்ளது. இதனால் பயணிகளிடம் சோதனை நடத்துவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் இரவு திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் ஏர் ஏசியா விமான பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.