சென்னை: தர்மபுரியில் பாலியல் துன்புறுத்தலில் மாணவி பலியான சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறினார்.தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் அளித்த பேட்டி: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையினரையும் கேட்டுக்கொள்கிறேன்.