சென்னை: ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் துவங்கியுள்ளது. முன்னதாக ஜிசாட்-29 செயற்கைகோள் திட்டமிட்டப்படி வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்தது. நவம்பர் 14 அதாவது நாளை மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் செலுத்தப்படுகிறது. 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோளான ஜிசாட் 29-ஐ இது எடுத்துச்செல்கிறது. வானிலை மாற்றம், கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட் 29 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. மழை, புயல் காரணமாக ஏவப்படாது என செய்தி வெளியான நிலையில் ஜிசாட்-29 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ள நிலையில், மதியம் 2.50 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண் டவுன் தொடங்கியது.