திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மாதந்திர பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை சமீபத்தில் திறக்கப்பட்டது. கோவிலுக்கு செல்ல முயன்ற சில பெண்களை பக்தர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்.