மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் சம்பத் பேசுகையில், தமிழக தொழில் வர்த்தகம் எளிதாக்கும் சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் 300 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 137 பேருக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழில் துவங்க விண்ணப்பித்த 20 பேரில் 17 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்துறை முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால் காலதாமதமாக வந்ததால் பல லட்சம் கோடி முதலீடுகளை நாம் இழந்துவிட்டதாக அந்நாட்டு தொழில் துறையினர் தெரிவித்தனர். தொழில் துவங்க விரைவாக அனுமதி கிடைக்க ஒற்றை சாளர முறையில் எளிதாக விண்ணப்பிக்க, 11 துறை இணைக்கப்பட்டுள்ளது என்றார்.