சென்னை: 3-வது T20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.