டிடிவி தினகரன் துரோகி; அதிமுகவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கோவை: அனைத்து தொகுதிகளிலும் மக்கள் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். டிடிவி தினகரன் துரோகி என்றும், அதிமுகவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர் டிடிவி என்றும் முதலமைச்சர் எடப்பாடி கடுமையாக சாடினார். கொசு உற்பத்தியாகமல் தடுக்கப்பட்டு வரருவதாகவும், டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக மக்களின் உரிமைகளை காப்பதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக செல்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், பொதுமக்கள் தங்களது சுற்றுப்புற பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும் காய்ச்சல் வந்த உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றால் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என்று முதலமைச்சர் தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: