ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை

கரூர்: கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி : சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து சீரமைப்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.அதே போல் தமிழகத்தி–்ல் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் குழு அமைத்து போக்குவரத்து சீரமைப்பு குறித்து கண்காணிக்கப்படும்.போக்குவரத்து விதிகளின்படி ஆம்னி பஸ்களுக்கு இவ்வளவுதான் கட்டணம் என்று நிர்ணயிக்கப்படவில்லை. சீசன் இல்லாத காலங்களிலும், குறைந்த கட்டணத்தையும், பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணமும் வாங்குகின்றனர். இருந்தாலும் மக்களை பாதிக்கும் அளவுக்கு கட்டண உயர்வு இருந்தால் ஆம்னி பஸ்கள் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: