தொடர்மழைக்கு மின் வாரிய அலுவலகம் இடிந்து சேதம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் சேதடைந்த மின்வாரிய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவில்லிபுத்தூர் சக்கரக்குளத் தெருவில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இங்கிருந்து திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் மேற்கு பகுதிகளுக்கு மின் விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் மின் கட்டணம் ெசலுத்தவும் கவுன்ட்டர்கள் உள்ளன. இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் தொடர்மழை காரணமாக கட்டிடத்தின் முன்பக்கம் உள்ள தாழ்வாரம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. அந்த வழியாக பொதுமக்கள் யாரும் ெசல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.  கட்டிடத்தின் பிற பகுதியும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: