காஞ்சிபுரம் : நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் முதலமைச்சர் நிரபராதி என்றால், அவர் விசாரணையில் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். எந்த ஜாதி, எந்த மதம், எந்த அமைப்பு என்று பாராமல், வழிபாட்டிற்கு செல்கிறார் என்ற ரீதியில் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.