சென்னை : பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வாரணாசியில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், வரும் டிச. 12 தமது பிறந்த நாளன்று கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்படாது, தாமதமாகும் என்று அறிவித்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டாலும், சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், #MeToo பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் ரஜினி கூறினார்