திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் பக்தர்கள் மட்டுமின்றி, 18ம் படி முன்பு அமர்ந்து அர்ச்சகர்கள் தர்ணா செய்ததை அடுத்து, சன்னிதானத்திற்குள் நுழைய முயன்ற 2 இளம் பெண்கள் திரும்பி சென்றனர். தெலங்கானாவை சேர்ந்த தனியார் டிவி பெண் நிருபர் கவிதா,சமூக செயல்பாட்டாளர் ரஹ்னா பாத்திமாஆகிய இருவரையும் நேற்று காலை 6.45 மணிக்கு ஐ.ஜி. ஜித் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அழைத்து சென்றனர். கவிதாவுக்கு போலீசார் அணியும் பாதுகாப்பு உடையும், ஹெல்மெட்டும் வழங்கப்பட்டது. ரெஹ்னா இருமுடி கட்டுடன் வந்தார்.