சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சென்னையில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கையில் தமிழக மீனவர்களை தாக்குவது, சிறைப்பிடிப்பது தொடர்ந்து நடக்கிறது. பாஜ ஆட்சியில், 150க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மீட்கப்படாத நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகள், மீனவர்கள் பிரச்னையில் அலட்சியம் காட்ட கூடாது. சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு சமஉரிமை வேண்டும். சம்பிரதாயம் பாதிக்கப்படுகிறது என்று நினைத்தால் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டும். அதை விடுத்து, வன்முறையில் ஈடுபடுவது, பெண்களையும் பத்திரிகையாளர்களையும் தாக்குவது சரியானதல்ல.