ரூ.12 லட்சம் குட்கா பறிமுதல்

சென்னை, அக். 20: ஸ்பெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதி சுங்கச்சாவடி அருகே, நேற்று முன்தினம்  பூந்தல்லியை நோக்கி சென்ற மினி லாரியை, போலீசார் மடக்கினர். இதனை கண்ட லாரி டிரைவர், லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே, போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில்,  தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து லாரியையும், அதிலிருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 15 மூட்டை ஹான்ஸ் பாக்கெட், 140 பெட்டிகளில் இருந்த பான்பராக் பொருட்களையும், போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய லாரி ஓட்டுநகரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: