சிறுமி, மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி

சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் வடமாநிலத்தை ேசர்ந்த வாலிபர்கள் மற்றும் சிலர் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். தங்கும் விடுதியின் மூன்றாவது தளத்தில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் இரண்டு ெபண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த புதன்கிழமை இரண்டு சிறுமிகளும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து அறையில் தங்கி உள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாணிக்கம் (எ) மாணிக்கம் சிங் (19) 8 வயது சிறுமியுடன் விளையாடுவது போல் நடித்து, அவரை தங்கும் விடுதியில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு சிறுமியின் ஆடைகளை கழற்றிய போது சிறுமி சத்தம் போட்டு அழுதுள்ளார். அப்போது மாணிக்கம் சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதையறிந்து ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மாணிக்கத்தை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் இதுகுறித்து அண்ணாசாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் மாணிக்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதேபோல், துரைப்பாக்கம், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற அதே பகுதியை சேர்ந்த விஜய் (20) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: