சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த மழை : மக்கள் உற்சாகம்

சென்னை; தலைநகர் சென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மிதமான வெயில் தலைகாட்டியது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் மதியம் முதல் மழை அவப்போது வெளுத்து வாங்குகிறது. தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மதியம் முதலே பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது மீனம்பாக்கம், கிண்டி, அசோக்நகர், வடபழனி,விருகம்பாக்கம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுதவிர பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ள நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: