திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பக்தர்களை தவிர செய்தியாளர், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குமாறு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது.
சபரிமலை கலவர பூமியாக மாற அரசு விரும்பவில்லை என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். போராடத்தை வெளிப்படுத்துவதற்கான இடம் சபரிமலை இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார். பக்தர்களின் கடும் எதிர்ப்பால் பத்திரிக்கையாளர் உள்பட 2 பெண்களையும் திரும்பிச்செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பந்தள மன்னர் குடும்பம் உத்தரவுசபரிமலையில் பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூட பந்தள மன்னர் குடும்பம் உத்தரவிட்டுள்ளது. ஐ.ஜி. பேச்சுவார்த்தைசன்னிததானத்துக்கு வெளியே பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்களுடன் கேரள ஐ.ஜி பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். தாக்குதல் நடத்தி எதிர்ப்பாளர்களை கலைக்கும் எண்ணம் போலீசுக்கு இல்லை என்றும், சபரிமலை கட்டுப்பாடுகளை தகர்த்து பெண்களை சன்னிதானம் அழைத்துச் செல்ல மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி