கந்தகார்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வேட்பாளர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் நாளை மறுதினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை சீர்குலைக்க தலிபான், ஐஎஸ் உட்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசார கூட்டங்களில் இந்த அமைப்புகள் இதுவரை நடத்தியுள்ள வெடிகுண்டு தாக்குதல்களில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 9 வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.