கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கியது கனடா: சுகாதார ஆர்வலர்கள் கடும்எதிர்ப்பு

ஒட்டாவா: கனடா நாடு கஞ்சா பயன்பாட்டை தற்போது சட்டபூர்வமாக்கியுள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய சட்டரீதியான கஞ்சா விற்பனை சந்தையாக கனடா உருவெடுத்துள்ளது. கஞ்சா பயன்படுத்துபவர்கள் மற்றும் அந்த தொழிலில் முதலீடு செய்பவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கஞ்சா பயன்படுத்துவது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று சுகாதார ஆர்வலர்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு, கனடாவின் பிரதமர் தேர்தலின் போது, ஜஸ்டின் ட்ரூடே கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்குவேன் என்று பிரசாரத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி தான், கானபிஸ் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை, உருகுவே நாட்டிற்கு பின்னர், கனடா தான் கஞ்சாவை சட்டபூர்வமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கனடாவில் இந்த நடவடிக்கை நேர்மறை விளைவைக் கொடுத்தால் பிற நாடுகளும் நம்மைப் பின்பற்றும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: