புதுடெல்லி: உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், அரசு நிர்ணயித்துள்ள பட்ஜெட் இலக்குகளை எட்டுவதில் பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஜூலையில், பருத்தி, சோயாபீன்ஸ், நெல் ஆகியவற்றுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை, உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிகரித்து அரசு அறிவித்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து விளைச்சல் அதிகமாகி சந்தையில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.