புதுடெல்லி: சிமென்ட் உற்பத்தியாளர் சங்க தலைவர் சைலேந்திர சவுக்சே கூறுகையில், சிமெண்ட் விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டள்ளது. கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல் விலை 60-70 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் எங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியையாவது சரி கட்ட வேண்டும். சிமெண்ட் விலை 6-7 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. ஆனால், அடக்க விலை அதிகரித்துள்ளது. ஆனால், விற்பனை விலை உயரவில்லை.