புதுடெல்லி: இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: கச்சா எண்ெணய் விலை, அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. போதுமான உற்பத்தி இருந்தபோதிலும் எண்ணெய் துறையின் சந்தையில் நிலவும் தனிப்பட்ட தன்மைகள், விலையேற்றத்துக்கு வழிவகுக்கின்றன. மற்ற சந்தைகளில் நிலவுவது போலவே எண்ணெய் சந்தையிலும் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் கூட்டு முயற்சி அவசியம். கச்சா எண்ணெய் விலை உயர்வால் இதை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை போக்க எண்ணெய் வள நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.