மகாதமனி நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. மகாதமனி நோய் உருவான பெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடித்தல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், குடும்ப பரம்பரை, உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை மற்றும் கொழுப்பு அதிகமாதல் போன்றவையே அபாய காரணிகளாகின்றன. கொழுப்புப் பொருள், கொலஸ்டிரால் மற்றம் பிற பொருட்கள் ரத்த நாளச் சுவற்றில் படிவதே தமனிக்குழாய் ஒடுங்குவதற்கும் மெல்லியதாவதற்கும் காரணமாகிறது.
மகாதமனி நோய், பக்கவாதம், இதய செயலிழப்பு போன்றவைக்கு உயர் ரத்த அழுத்தமும் ஒரு முக்கிய அபாய காரணியாகும். நல்ல கொழுப்பை உயர்த்த உதவும் ஈஸ்டரோஜன் பெண்களை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது, ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு பெண்களும் ஆண்களை போன்றே பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் நீரிழிவு அல்லது கொலஸ்டிரால், எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு அதிகமாகும் மேலும் குடும்ப பரம்பரை காரணமாக மகாதமனி நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. புகைப்பிடிப்பது ரத்த நாள உள்சுவரைச் சிதைத்து, தமனிகளில் கொழுப்பு படிவதை அதிகரிக்க செய்கிறது. நிகோடின் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்து ரத்த அழுத்ததை உயர்த்தச் செய்கிறது.
நெஞ்சு வலி அல்லது அசௌகர்யம் (எரிச்சல், அழுத்தம், இறுக்கம் அல்லது கனம்), தொண்டை, வாய், தோள் அல்லது முதுகு, முழுங்கை, மணிக்கட்டில் அசௌகர்யம், சுவாச குறைபாடு, குமட்டல், வியர்த்தல் போன்றவை இதய அடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும்.சரிவிகித உணவை உட்கொள்ளுதல், போதிய உடற்பயிற்சி, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வருதல், நிரிழிவை கட்டுக்குள் வைத்திருத்தல், எடையை சரியாக பராமரித்தல் போன்றவை இதய நோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும் என்று பிரசாந்த் சிறப்பு மருத்துவமனையின் இதயவியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் கே. சந்திரசேகரன் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி