திருமலை: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் அமைச்சருமான லோகேஷ் மற்றும் வட அமெரிக்க தெலுங்கு சங்க தலைவர் வேமூல ரவிக்குமார் இணைந்து தகவல் தொழில்நுட்ப துறையில் எம்ஓயூ என்ற பெயரில் போலி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி அவர்களின் சொத்துக்களை பல மடங்கு உயர்த்தி இருப்பதாகவும்முன்னாள் நீதிபதி சரவண்குமார் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் முன்னாள் நீதிபதி சரவண்குமார் நேரில் ஆஜராகி வாதாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.