அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ரபேல் போர் விமானம் கொள்முதல் ஊழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார் என்று கூறினார். ரபேல் நிறுவனத்துடன் சேர்ந்து விமானம் தயாரிக்க அனில் அம்பானி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். வாழ்க்கையில் ஒரு விமானம் கூட தொழிலதிபர் அம்பானி தயாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

பிரான்ஸ் நிறுவனத்துடன் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்டஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, இந்திய அரசு கூறியதால், ரிலையன்ஸ்நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தோம் என்று பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். இந்தவிவகாரம் பெரும் கொந்தளிப்பையும், மத்திய அரசுக்கு பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் செய்தார் என்று காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இந்நிலையில் வாழ்க்கையில் ஒரு விமானம் கூட தொழிலதிபர் அம்பானி தயாரிக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: