நெல்லை: நெல்லை ஏர்வாடியில் ஆட்டோ ஓட்டுனரை கடத்திக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷேக்முகமது காஜாமொய்தீன் கொலை வழக்கில் மகேஷ், கதிர்வேல்சாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையுடன் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.