சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட விடக்கூடாது என அவர் கூறியுள்ளார்.