டெல்லி: ரபேல் போர் விமானம் கொள்முதல் ஊழல் தொடர்பாக பிரதமர் மீது ராகுல் குற்றம் சாட்டினார். அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார் என்று கூறினார். ரபேல் நிறுவனத்துடன் சேர்ந்து விமானம் தயாரிக்க அனில் அம்பானி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். வாழ்க்கையில் ஒரு விமானம் கூட தொழிலதிபர் அம்பானி தயாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.