திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டுள்ள பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை பிஷப் பிராங்கோ பணியாற்றி வந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை வன்புணர்வு செய்ததாக பிஷப் பிராங்கோ மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பிஷப் பிராங்கோவிற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே புகார் அளித்து 70 நாட்கள் ஆகியும் பிஷப் பேராயர் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி 5 கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.