லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற மரம் ஏறும் சர்வதேச போட்டி கோலாகலமாக நடைபெற்றது இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஆல்சஸ்டர் நகரில் நடந்த இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். 82 அடி உயரத்தில் நட்டு வைக்கப்பட்டிருந்த மரக்கம்பத்தில் குறைந்த நேரத்தில் ஏறி உச்சியைத் தொட வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் விதி ஆகும். மேலும் மரத்தில் ஏறும் போட்டியாளர்கள் பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொண்டனர்.