பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 28-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கருப்பு  சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப் படவில்லை என்று விக்கிரமராஜா கூறினார். மேலும் பிளாஸ்டிக் பை தடை குறித்து அரசு தெளிவாக விளக்க வேண்டும் என சென்னையில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: