ராஜீவ் காந்தி கொலை வழக்கு: தமிழக ஆளுநரை சந்தித்து அற்புதம்மாள் வலியுறுத்தல்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரை விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஏற்குமாறு வலிறுத்தியதாக அவர் கூறினார்.

தனது மகன் தரப்பு நியாயத்தை மனுவில் எழுதியிருப்பது குறித்து விளக்கியதாக அற்புதம்மாள் கூறினார். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தாமஸின் கருத்தையும் மனுவில் குறிப்பிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார்.

தனது மனுவை விரைவில் கவனித்து முடிவு செய்வதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவு, அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அற்புதம்மாள் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: