விருத்தாசலத்தில் இன்று காலை ருசிகரம்: மணமகளுக்கு காஸ் சிலிண்டரை மொய்யாக வழங்கிய நண்பர்கள்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இன்று காலை நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு மொய்யாக காஸ் சிலிண்டரை வழங்கியதால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் தினமும் உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப்பில் மத்திய அரசை விமர்சித்து மீம்ஸ், பதிவுகள் மக்களிடையே ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சகட்டு மேனிக்கு மத்திய அரசை கலாய்த்து வருகின்றனர்.

கடந்த வாரம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சியில் நடந்த திருமண விழாவிலும், கடலூரில் நடந்த திருமண விழாவிலும் மணமக்களுக்கு பெட்ரோலை நண்பர்கள் மொய்யாக வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விருத்தாசலத்தை சேர்ந்த செல்வக்குமார்-கஸ்தூரி திருமணம் இன்று காலை அங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது உயர்ந்து வரும் காஸ் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் மணமக்களுக்கு 14 கிலோ கொண்ட காஸ் சிலிண்டரை நண்பர்கள் மொய்யாக வழங்கியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: