பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் புது காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வயல்வெளியில் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.