3வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

கொழும்பு: இலங்கை மகளிர் அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.கொழும்பு கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்தது. கேப்டன் ஜெயாங்கனி 28, ஷஷிகலா வர்தனே 35, நிலாக்‌ஷி டி சில்வா 31, கவுஷல்யா 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர்.இந்திய பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி, ஹர்மான்பிரீத் கவுர் தலா 2, அனுஜா பட்டீல், பூனம் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் மித்தாலி ராஜ் 13, ஸ்மிரிதி மந்தனா 6, டானியா பாட்டியா 5 ரன்னில் ஆட்டமிழக்க சற்று தடுமாறியது. இந்த நிலையில், ஜெமிமா ரோட்ரிகியூஸ் - கேப்டன் ஹர்மான்பிரீத் இருவரும் 4வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தனர்.ஹர்மான்பிரீத் 24 ரன், ஜெமிமா 57 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜெயாங்கனி பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். இந்தியா 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன் குவித்து வெற்றியை வசப்படுத்தியது. வேதா 11, அனுஜா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்க, 4வது டி20 போட்டி கொழும்புவில் நாளை நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: