மரக்காணம்: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளூக்கு சொந்தமான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களூக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்த தொழிலை நம்பி இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு ஆண்டு தோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து அக்டோபார் மாதம் வரையில் நடைபெறும். கோடை வெயிலில்தான் உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும். இப்பகுதியில் ஜனவரி மாதத்தில் இருந்து கோடை மழை பெய்யவில்லை.