எல்லையில் காணாமல் போன பாதுகாப்புப்படை வீரர் சடலமாக மீட்பு..... பாகிஸ்தான் ராணுவம் சித்திரவதை செய்து கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரரின் உடல் சுமார் 9 மணி நேரம் கழித்து  கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாயமான இந்திய ராணுவ வீரர் பாக். ராணுவத்தால் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. அவரது தொண்டைப்பகுதி அறுக்கப்பட்டு, உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள் உள்ளன.

இறுதியாக அவர் ஸ்நைப்பர் படையினர் பயன்படுத்தும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் உயரதிகாரி தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய இந்த தாக்குதலால் வீரர் உயிரிழந்ததால் எல்லையில் பதற்றம் நிலவியுள்ளது. சாம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாவும் எல்லையில் ரோந்துப் பணியை மேற்கொண்ட வீரர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் இந்திய வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: