சென்னை: செப்டம்பர் 22 முதல் 24 வரை ஸ்டெர்லைட்டில் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் குழு ஆய்வு செய்ய உள்ளதாக வந்த தகவலையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை ஒத்திவைக்குமாறு தமிழக அரசு, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் ஸ்டெர்லைட் ஆய்வு திட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு திட்டத்தை ரத்துசெய்யுமாறு தமிழக அரசு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.