சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், பாரிமுனையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதோடு அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிக்குளாகினர். பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.