அதிமுக ஊழல் ஆட்சியை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் தொடங்கியது

சென்னை : தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியை கண்டித்து தமிழகம் முழுவது திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடை பெற்று வருகிறது.

அதேபோன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தலைமையில் நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், புதுக்கோட்டை அண்ணா திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலர்கள், நிர்வகிகள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: