சென்னை: சென்னை மதுரவாயல் அருகே பிரபல கொள்ளையன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த புறா மணி என்ற மணிகண்டன் என்பவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 13ம் தேதி வானகரம் மீன் சந்தை அருகே அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.