சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை - தொடர்பாக 6 பேர் கைது

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே பிரபல கொள்ளையன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த புறா மணி என்ற மணிகண்டன் என்பவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 13ம் தேதி வானகரம் மீன் சந்தை அருகே அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மணிகண்டன் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நெற்குன்றத்தைச் சேர்ந்த சுல்தான், நாகராஜ், அரவிந்த், அருண், ஆனந்த் மற்றும் விக்கி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: