முதல்வர்கள் மாநாட்டுக்கு ஓபிஎஸ் செல்கிறார்

சென்னை: பெங்களூரில் இன்று நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்துகொள்கிறார். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இன்று முதல்வர்களின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு அவர் விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டு சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: