லாகூர்: புற்றுநோய் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்மனைவி பேகம் குல்சூம், கடந்த செவ்வாய்க்கிழமை இறந்தார். அவருக்கு வயது 68. அவரது உடல் லண்டனில் இருந்து லாகூருக்கு நேற்று விமானத்தில் எடுத்து வரப்பட்டது. அவரது உடலுடன் மகள் அஸ்மா, பேரன் சயித் உசேன் ஷெரீப் மற்றும் 11 உறவினர்கள் உடன் வந்தனர். ஊழல் வழக்கில் தலைமறைவாக உள்ள நவாசின் மகன்கள் ஹாசன், உசேன் நவாஸ் ஆகியோர் தனது தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.