பீஜிங்: சீனாவில் மக்கள் கூட்டத்தில் கார் பாய்ந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த பழைய குற்றவாளி கைது செய்யப்பட்டார். சீனாவின் ஹெங்டாங் நகர மைய சதுக்கத்தில் நேற்று முன்தினம் இரவு மக்கள் அதிகமாக கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த சிவப்பு நிற கார் ஒன்று, மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, காரை ஓட்டி வந்த யாங் ஜான்யூன் (54) என்ற நபரை கைது செய்தனர். இவர் பழைய குற்றவாளி என்பதும், ஏற்கனவே பல வழக்குகளில் சிறை சென்று வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.