அமெரிக்காவில் பயங்கரம் மனைவி உட்பட 5 பேரை சுட்டுக் கொன்று வாலிபர் தற்கொலை

பேக்கர்ஸ்பீல்ட்: அமெரிக்காவில் மனைவி உட்பட 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் இறுதியில் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அமெரிக்காவில் கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்பீல்டில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனைப்பார்த்த மேலும் 4 பேரையும் அவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றதாக தெரிகிறது. துப்பாக்கி சூடு குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.  துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்ந சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: