சர்வதேச தரத்தில் கொலை படம்: விஜய் ஆண்டனி நம்பிக்கை

சென்னை: கொலை படம் சர்வதேச தரத்தில் இருக்கும், இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக அமையும் என நடிகர் விஜய் ஆண்டனி கூறினார். விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா உள்பட பலர் நடித்துள்ள படம் கொலை. புதியவர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசியது: கொலை படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.  இது இயக்குனர் பாலாஜியின் கனவு திரைப்படம். இந்த படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் நான் சொல்கிறேன், கொலை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு புதியவர்கள். மிகுந்த அனுபவம் கொண்ட அவர்களுடன் பணியாற்றுவது நல்ல அனுபவத்தை கொடுத்தது. படத்தின் இசையும் சர்வதேச தரத்தில் அமைந்திருக்கிறது. கிராஃபிக்ஸ் அருமையாக உள்ளது. த்ரில்லர் கதையம்சத்துடன் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். நடிகைகள் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் இருவருக்கும் படத்தின் கதையில் முக்கியமான கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது.

Related Stories: