தமிழில் கடைசியாக சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். இதற்கிடையே ஒரு கும்பல் அவரை திருமணத்துக்கு பெண் பார்க்க வருவதாக கூறி பித்தலாட்டத்தில் ஈடுபட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என பூர்ணா தெரிவித்துவிட்டார். மீண்டும் சினிமாவில் நடிப்பதில் அவர் ஈடுபாடு காட்டுகிறார்.