பூர்ணாவின் திருப்புமுனை வேடம்

தமிழில் கடைசியாக சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். இதற்கிடையே ஒரு கும்பல் அவரை திருமணத்துக்கு பெண் பார்க்க வருவதாக கூறி பித்தலாட்டத்தில் ஈடுபட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என பூர்ணா தெரிவித்துவிட்டார். மீண்டும் சினிமாவில் நடிப்பதில் அவர் ஈடுபாடு காட்டுகிறார்.

மலையாளத்தில் வெளியான ஜோசப் படம், தமிழில் விசித்திரன் என்கிற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் பாலா இந்த படத்தை தயாரிக்கிறார். மலையாள ஜோசப் படத்தை இயக்கிய பத்மகுமார், இந்த தமிழ் படத்தையும் இயக்கி வருகிறார். இதில்தான் பூர்ணா நடிக்கிறார். கதைப்படி அதிக காட்சிகளில் வராவிட்டாலும் படத்தின் திருப்புமுனைக்கு காரணமான வேடத்தில் நடிப்பதாக பூர்ணா சொல்கிறார்.

Related Stories: