டெல்லியில் விகாஸ்புரி என்ற பகுதியை சேர்ந்தவர் கமல்சிங். 20 வயதான இவருக்கு பாலே டான்ஸ் என்றால் அதிக விருப்பம். இவரது அப்பா ரிக்ஷா ஓட்டுநர். கமல்சிங், படிப்பை முடித்துவிட்டு பாலே டான்ஸ் கற்று வந்தார். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற லண்டனில் உள்ள ஆங்கில தேசிய பாலே நடனப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது இவரது கனவு. இதற்காக இவர் விண்ணப்பமும் அனுப்பி இருந்தார். இந்நிலையில் அவருக்கு லண்டன் பாலே பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. இந்தியாவிலிருந்து அப்பள்ளியில் நடனம் கற்க தேர்வான ஒரே நபர் கமல்சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.